பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பிற்காலச் சோழர் சரித்திரம் என்றும் வழங்குவர். அது கடற்கரைப்பட்டினம் என்பது • சேரலன் வேலைகெழு காந்தளூர்ச்சாலை' என்ற கல் வெட்டுத் தொடரால் பெறப்படுகிறது. அங்குச் சேர மன்னனோடு இராசராச சோழன் போர் நிகழ்த்தியமைக்குக் காரணம் தெளிவாகப் புலப்படவில்லையாயினும் ஓரளவிற் குறிப்பாகத் தெரிகிறது. இவன் காலத்தில் சேர நாட்டில் ஆட்சி புரிந்தவன் பாற்கர ரவிவர்மன் என்பான். அவன் கி. பி. 978 முதல் 1036 வரையில் அந்நாட்டில் அர சாண்டான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. 3 எனவே, இராசராசசோழன் ஆட்சிக்கால முழுமையும் அவன் இருந்தனன் என்பதில் ஐயமில்லை. இராசராச சோழனுக்கும் பாற்கர ரவிவர்மனுக்கும் பகைமை உண் டாகிப் போர் நடைபெற்றமைக்குக் காரணம், இவன் சேரநாட்டிற்கு அனுப்பிய தூதன் ஒருவனை அவன் அவமதித்து இழிவாக நடத்தி உதகையில் சிறையிட்டி ருந்தமையேயாம். இச்செய்தி, கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற உலாக்களில் மிகச் சுருக்க மாய்ச் சொல்லப்பட்டுள்ளது. தூதர்களை அவமதிப்பதும் சிறையிடுவதும் அரசராயினார்க்கு அடாத செயல்களே. அன்றியும், அச்செயல்கள் அரசநீதிக்கு மாறுபட்டனவும் ஆகும். - அறநெறியிற் பிறழாத சேரர்குடியிற் பிறந்த பாற்கர ரவிவர்மன் என்பான், இராசராசசோழன் தூதனை 1. Travancore Archaeological Series, Vol. II, pp. 4 & 5. 2. S. I. I, Vol. II, page 241 ; Ibid, Vol. VIII, No. 199. 3. T. A, S., Vol. II, page 32.

-- தூதற்காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமுங் கொண்டு மலை நாடு கொண்டோனும்' (விக்கிரம சோழன் உலா, வரிகள் 32-34) - சூழவும் ஏறிப் பகலொன்றில் எச்சுரமும் போயு தகை நூறித்தன் றூதனை நோக்கினோன் ' (குலோத்துங்க சோழன் உலா, 46-48)