முதல் இராசராச சோழன் 121 கைப்பற்றியிருத்தல் வேண்டும். அப் படையெழுச்சியைப் பற்றிய செய்திகள் சிறிதும் புலப்படவில்லை. எனி னும், இவன் வென்று கைப்பற்றிய பழந்தீவுகள் கடல் நடுவில் இருந்தமையால் அவற்றின்மீது படையெடுத்துச் செல்வதற்குக் கப்பற் படைகள் இன்றியமையாதன ஆகும். எனவே, பெருவேந்தனாகிய நம் இராசராசன், அலைகடல் நடுவுள் பல கலங்கள் செலுத்தியே முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் வென்று கைப்பற்றின னாதல் வேண்டும். இவன் ஆட்சியில் முன் நிகழ்ந்த ஈழ மண்டலப் படையெடுப்பையும் இவன் கப்பற் படைகளின் துணைகொண்டே நிகழ்த்தியிருத்தல் வேண்டும். ஆகவே, இராசராச சோழனிடத்தில் சிறந்த கப்பற்படை அந்நாளில் இருந்தது என்பது தேற்றம். இனி, இராசராசசோழன் ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் மிக உயர் நிலையில் இருந்தது எனலாம். பாண்டி மண்டலமும் சேரமண்டலமும் அடங்கிய இராசராசத் தென்னாடும். தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலமும், கங்க மண்டலமும், கொங்கு மண்டலமும், நுளம்பபாடி நாடும், கலிங்க நாடும், ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்று உறுதி யாகக் கூறலாம். இம்மண்டலங்களுள் சிலவற்றிற்குப் பெயர்களாக இவனது சிறப்புப் பெயர்கள் வழங்கப்பெற்றமை அறியத்தக்கது. இராசராசசோழன் பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் புதல்வனாகிய இராசேந்திரனுக்குக் கி. பி. 1012-ஆம் ஆண்டில் 2 இளவரசுப்பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்துகொண்டு பல துறைகளிலும் பயிற்சி பெற்று வருமாறு செய்தனன். அவ்வாண்டிற்கு முன்னர் நிகழ்ந்த கங்கப் போர், கலிங்கப்போர், குந்தளப்போர் முதலானவற்றிற்குச் 1. Travancore Archaeological Serics, Vol. I. p. 292 1. Ep. Ind., Vol. VIII, p. 260.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page148-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)