பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 133 ராசனுக்குப் பெரு வீரனாகிய இராசேந்திரன் ஒரே புதல் வன் ஆவன். , வேறு புதல்வர் இலர். ஆனால், பெண் மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுள், மூத்த பெண் மாதேவடிகள் என்னும் பெயரினள். இளைய பெண் இரண்டாம் குந்தவையாவள். அவள், கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனள், அவ்விருவர் களுக்கும் பிறந்த புதல்வனே முதற் குலோத்துங்கன் தந்தையாகிய இராசராச நரேந் திரன் என்பது அறியற்பாலதாகும். இராசராசன் தமக்கைக்கும் இளைய புதல்விக்கும் குந் தவை என்னும் பெயர் இருத்தலால் வேறுபாடு உணர் தற்பொருட்டு இவன் தமக்கையைப் பெரிய குந்தவை என்று வழங்கியுள்ளனர். அவ்வம்மை வல்லவரையர் வந்திய தேவரை மணந்து வாழ்ந்தவள் என்பது முன் 1. திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டில் மாதேவடிகள் நடு விற்பெண்' எனவும், ' நடுவிற்பிள்ளை' எனவும் குறிப் பிடப்பட்டிருத்தலால் இராசராசனுக்கு மூன்று பெண்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கொள்கை . (The Colas, Vol, I. p. 226 ) நடுவிற்பிள்ளை என்ற தொடர் மூத்த பிள்ளையாகிய இராசேந்திரனுக்கும் இளைய பிள்ளையாகிய குந்தவைக்கும் நடுவிற் பிறந்த பிள்ளை என்ற பொருளைத் தரும் அளவில் அமைந்துள்ளது. இத் தொடருக்கேற்பவே நடுவிற் பெண் என்ற தொடர்க் கும் பொருள் கொள்ளவேண்டும். ஆதலால் இத்தொடரை ஆதாரமாகக் கொண்டு இராசராசனுக்கு மூன்று பெண்கள் இருந்தனர் என்று கொள்வது பொருந்தா தென்க. இனி, திருவையாற்று உலோகமாதேவீச்சுரத்திலுள்ள கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ள இராசராசன் மகளாகிய சந்திரமல்லி என்பாள் மேலே சொல்லப்பட்ட மாதேவடிகள் என்னும் பெண்ணேயாவள். சந்திரமல்லி என்பது சந்திரமௌலி என்பதின் மரூஉவாகும். இதன் பரியாய நாமமே மாதேவ அடிகள் என்பது ஈண்டு உணரத் தக்கது.