முதல் இராசராச சோழன் 135 மன்னன் ஆவன். பழுவேட்டரையர் என்ற பட்ட முடையோர் சேரர் மரபினருள் ஒரு கிளையினரேயாவர். அவர்கள் சோழர்கட்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதற் பராந்தக சோழன் பழுவேட்டரையன் மகளை மணந்து கொண்டான் என்பதும் அவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே இராசராசசோழன் பாட்டனாகிய அரிஞ்சயன் என்பதும் அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகின்றன. இராசராசன் மனைவியருள் பஞ்சவன் மாதேவி என்பாள் பழுவேட்டரையன் மகள் ஆவள் 2 . இச்சோழ மன்னன் காலத்திலிருந்த பழுவூர்க் குறு நிலமன்னன் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பவன். இவன் குறுநில மன்னர்க்குரிய எல்லாச் சிறப்புக்களும் உடையவனாய் இனிது வாழ்ந்தவன் என்பது பழுவூரில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக் கின்றது . கொங்கு நாட்டிலிருந்த கொல்லிமழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசனுக்குக் கப்பஞ் செலுத்திவந்த ஒரு குறு நிலமன்னன் என்பது திருச்செங் கோட்டுச் செப்பேடுகளால் புலனாகின்றது . இராசராசன் தந்தையாகிய சுந்தரசோழன் ஈழ நாட்டு வேந்தனோடு நிகழ்த் திய போரில் இக்கொல்லிமழவன் தந்தை சோழர் பக்கத்தி லிருந்து போர்புரிந்து அந்நாட்டில் உயிர் துறந்தான் 5 . எனவே, கொங்கு மண்டலத்திலிருந்த இக்குறு நில மன்னர் குடியினர் தம் பேரரசராகிய சோழர்கட்குப் போர் நிகழ்ச்சி களில் உதவிப்படையனுப்பி உண்மை யன்புடன் ஒழுகி வந்தனர் என்பது பெறப்படுதல் காண்க. 1. Ep. Ind., Vol. XV, page 50. 2. Ins. 385 of 1924. 3. S. I. I., Vol. V, Nos. 667, 670, 671, 672 and 676. 4. Ibid, Vol. III, No. 213: 5. Ibid, No. 212.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page162-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)