பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பிற்காலச் சோழர் சரித்திரம் அதனைத் தஞ்சைமா நகரில் ஆண்டுதோறும் விழாக்காலங் களில் நடித்தற்கு இரண்டாம் இராசேந்திர சோழன் நூற்றிருபது கல நெல் நிவந்தமாக அளித்திருப்பது அறியத்தக்கது. அவ்விரண்டு நூல்களும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவை கிடைப்பின் இராசராச சோழன் வரலாற்றில் பல அரிய செய்திகளை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.