முதல் இராசேந்திர சோழன் 159 இளவலான சயசிங்கன் என்பவன் கி. பி. 1016-ல் முடி சூடிச் சோழரிடம் தன் தந்தையும் தமையனும் இழந்த நாடுகளைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு முயன்று, அச் செயலில் சிறிது வெற்றி பெற்றமையேயாம். அதற் கேற்ப, கி. பி. 1019-ல் பௌகாம்வே (Belagamve) என்ற ஊரில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று சயசிங் கன் சோழரை வென்ற செய்தியைக் கூறுகின்றது 1. அன் றியும், பல்லாரி ஜில்லாவிலும் மைசூர் இராச்சியத்தின் வடமேற்குப் பகுதியிலும் சயசிங்கன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன 2. ஆகவே, சோழர் ஆட்சிக்கு உட் பட்டனவாய் எல்லைப்புறத்திலிருந்த சில பகுதிகளை அவன் மீண்டும் கைப்பற்றிக்கொண்டனன் என்பது தெள்ளிது. அதுபற்றியே, இராசேந்திர சோழன் சயசிங்கனோடு முயங்கியில் போர்புரிய நேர்ந்தது என்பதும் அப்போரில் இவன் வாகைசூடிப் பெரும் பொருளுடன் சோழ நாட்டிற்குத் திரும்பினன் என்பதும் தேற்றம். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற முயங்கி என்பது சில கல் வெட்டுக்களில் 'முசங்கி' என்றும் எழுதப்பெற்றுள்ளது 3. அது, பல்லாரி ஜில்லாவில் ஹர்ப்பனஹல்லி தாலூகாவி லுள்ள உச்சங்கிதுருக்கமேயாதல் வேண்டும் என்பது கல்வெட்டிலாகா அறிஞர்களின் கருத்து 4. பிறிதொரு சாரார், நைசாம் இராச்சியத்திலுள்ள மாஸ்கி என்ற ஊரே முயங்கியாயிருத்தல் வேண்டும் என்று கூறுகின் றனர் 5. அஃது எவ்வாறாயினும், அவ்வூர் மேலைச்சளுக் கிய இராச்சியத்தில் இருந்த ஒரு நகரம் என்பது திண்ண ம். 1. Dynasties of Kanarese Districts, p. 436. 2. Ep. Car., Vol. VII, S. K. 220 and 307. 3. S. I. I., Vol. II, No. 17. 4. ., Ibid, p. 95. 5. Sir Asutosh Mukherjee Commemoration, Vol. III, p. 545.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/186
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page186-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)