பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பிற்காலச் சோழர் சரித்திரம் இறந்தபிறகு கித்தி என்பான் எட்டு நாட்கள் ரோகணத்தில் அரசாண்டான். அவனுக்குப்பிறகு மகாலான கித்தி என் பான் முடிசூடி அந்நாட்டில் மூன்று ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரிந்தான். அவன் சோழர்களோடு புரிந்த போரில் தோல்வியெய்தி அவ்வவமானத்தைப் பொறாது தன் கையால் கழுத்தை அறுத்துக்கொண்டு (கி. பி. 1044-ல்) இறந்தான் 1. சோழ நாட்டுப் படைகள் அவன் முடி முதலானவற்றையும் பிற அணிகலன்களையும் பொருள்களையும் கைப்பற்றித் தம் அரசற்கு அனுப்பி விட்டன. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட மகாலான கித்தியின் செய்தி, சோழமன்னரது கல்வெட்டுக் களில் காணப்படவில்லை. இராசேந்திரசோழன் ஆட்சியின் இறுதியில் இராசாதிராசன் இளவரசனாயிருந்த காலத்தில் நடைபெற்ற இரண்டாம் ஈழ நாட்டுப்போர் இவ்வாறு முடிவெய் திற்று. மகாலானகித்தியின் மகன் விக்கமபண்டு என்பவன் இலங்கையிலிருப்பதற்கு அஞ்சித் துளுவ நாட்டில் இருந்து கொண்டிருந்தான். அவன், தன் தந்தை இறந்ததை அறிந்து ரோகணத்திற்குத் திரும்பிச் சென்று அந்நாட்டின் ஆட்சியை (கி. பி. 1044-ல்) ஏற்றுக் கொண்டான் என்று மகா வம்சம் கூறுகின்றது. பின்னர் அங்கு நிகழ்ந்த போர்ச் செய்திகள் இராசாதிராச சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும். இனி, இராசேந்திரசோழன் ஆட்சியின் இறுதிக்காலத் தில் சோழர்கட்கும் மேலைச்சளுக்கியர்கட்கும் மீண்டும் போர் தொடங்கிற்று. கி. பி. 1042-ல் மேலைச்சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் ஜயசிங்கன் இறக்கவே, அவன் மகன் முதல் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான். சோழர் களின் கல்வெட்டுக்கள் எல்லாம் அவனை ஆகவமல்லன் என்றே குறிப்பிடுகின்றன். ஜயசிங்கன் ஆட்சிக்காலத் திலேயே இடைதுறை நாடு மேலைச்சளுக்கியர்களால் கைப்பற்றப்பட்டுப்போயிற்று என்பது முன் கூறப்பட் டது. அதன் பின்னர், துங்கபத்திரை யாற்றிற்குத் 1. Ep. Zeylanica, Vol, III, No. 1. Ceylon Kings. A Chronological Table of