பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பிற்காலச் சோழர் சரித்திரம் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆக வமல்ல சோமே சுரன் கி. பி. 1042-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்ற வன். ஆகவே,. அவனது ஆட்சியும் மேலைச் சளுக்கிய நாட்டில் அவ்வாண்டில் தொடங்கியிருத்தல் வேண்டும். எனவே, இராசாதிராசன் அந் நாட்டில் நிகழ்த்திய போரும் கி. பி. 1042, 1043-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாதல் வேண்டும். அவன் இளவரசனாயிருந்த காலத்தில் நடத்திய அம்மேலைச் சளுக்கியப் போர் வெற்றியுடன் முடிவெய்தியமை அறியத்தக்கது. இனி, நம் இராசேந்திரன் இளமையில் தன் தந்தை யால் இடப்பெற்ற மதுராந்தகன் என்னும் பெயரும் தன் முடிசூட்டு விழாவில் பெற்ற இராசேந்திரன் என்னும் அபிடேகப் பெயரும் உடையவனாயிருந்தமையோடு வேறு சில சிறப்புப் பெயர்களையும் எய்தியிருந்தனன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் கல்வெட்டுக் களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அவை உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன், முடி கொண்ட சோழன், பண்டித சோழன், கடாரங்கொண் டான், கங்கைகொண்ட சோழன் என்பனவாம். அவற் றுள், உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன் என்னும் பெயர்கள் இவனுக்கு வழங்கியமை திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகிறது. 2 சோழர்களது முடிசூட்டுவிழா நடைபெற்ற தொன்னகரங் களுள் ஒன்றாயிருப்பதும் அரச குடும்பத்தினர் பலர் அக் காலத்தில் தங்கி வாழ்ந்து வந்ததும் ஆகிய பழையாறை மா நகர் இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்று வழங்கப் பெற்றிருத்தலையும் 3 அந் நகரின் தென்பால் ஓடும் ஆறு இவனால் வெட்டப்பெற்று முடிகொண்ட சோழப் பேராறு என்னும் பெயர் எய்தி 1. S. I. 1., III, No. 205. 2. Ibid, Verses 90, 104 and 113. 3. Ins. 271 of 1927. 4. முதற் குலோத்துங்க சோழன், ப. 21.