பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 முதல் இராசேந்திர சோழன் கூறுகின்றது !. தன் தந்தையின் ஆணையின்படி சேர பாண்டிய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாய் மதுரைமா நகரில் வீற்றிருந்து ஆட்சிபுரிந்த சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் இராசேந்திர சோழனுடைய மற்றொரு புதல்வன் ஆவன். 2 இராசேந்திரனுக்கு வேறு புதல்வரும் இருந்தனர் என்று சில கல்வெட்டுக்களால் தெரிகிறது. 3 அவ்வரச குமாரர்கள் சில மண்டலங்களுக்குத் தலைவராய் அமர்த்தப்பெற்று அவ்விடங்களில் அரசாண்டு வந்தனர். அரசகுமாரரை, வென்ற நாடுகளுக்குத் தலைவராக அமர்த்தும் புதிய முறையை முதலில் பின்பற்றத் தொடங்கியவன் நம் இராசேந்திர சோழனேயாவன். இவனுக்கு இரு பெண்கள் இருந்தனர். அவர்கள் அருமொழி நங்கை, அம்மங்கைதேவி என்போர். அருண் மொழி நங்கைக்குப் பிரானார் என்னும் வேறொரு பெயரும் உண்டு. கொள்ளிடத்திற்கு வடகரையில் கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள திருமழபாடிக் கோயிலுக்கு இவ்வம்மை சில நிவந்தங்கள் அளித்துள் ளனள். 4 மற்றொரு மகளாகிய அம்மங்கைதேவி, கீழைச் சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கும் முதல் இராச ராசசோழன். புதல்வியாகிய குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்னும் அரசகுமாரனுக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டனள், 5 அவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே பிற்காலத்தில் சோழராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாக முடி சூட்டப்பெற்று அரசாண்ட பெரு வீரனாகிய முதற் குலோத்துங்க சோழன் என்பது ஈண்டுணரற் பாலதாம். 1. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 73 2. Anual Report on South Indian Epigraphy for 1905. Part II, Para 25, 3. S. I. I., Vol. V, Nos. 644 and 647. 4. S. I. I., Vol. V, No. 635; Ins. 71 of 1920. 5. முதற் குலோத்துங்க சோழன், பக்கம் 14.