190 பிற்காலச் சோழர் சரித்திரம் பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன் ; இராசராச சோழன் ஆட்சிக்காலத்திலும் அத்தகைய உயர் நிலையில் இருந்தவன். ஆனைமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்களுள் இவனும் ஒருவன் ஆவன். 1 - 5. பாண்டியன் சீவல்லபன் : இவன் மனைவி சோழ நாட்டிலுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணி கலன்கள் அளித்துள்ளமையாலும் பாண்டி நாடு இராச ராசசோழன் காலமுதல் - சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந் தமையாலும் இப்பாண்டி வேந்தன் இராசேந்திர சோழ னுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த ஒரு சிற்றரசன் ஆதல் வேண்டும். 2 6. வல்லவரையன் வந்திய தேவன்: இவன் இராச ராச சோழன் தமக்கையான குந்தவைப் பிராட்டியின் கணவன் ஆவன் ; வடஆர்க்காடு சில்லாவில் பிரம தேசம் என்ற ஊரைச் சூழ்ந்த பகுதிகளை அரசாண்டவன். 3 சேலம் சில்லாவின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது. 4 எனவே, தன் அத்தையின் கணவன்பால் இராசேந்திரன் மிக்க அன்பும் மதிப்பும் வைத் திருந்தான் என்பது இனிது புலனாதல் காண்க. இவ் வல்லவரையன் சோழர்க்குச் சிறந்த படைத் தலைவனாகவும் இருந்தமை அறியத்தக்கது. 7. உத்தமசோழமிலாடுடையான் : இவன் தென் னார்க்காடு சில்லாவில் திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்ட மலையமானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறு நில மன்னன் ஆவன். இவனது இயற்பெயர் பராந்தகன் 1. S. I. I., Vol. II, Nos. 12 and 55. 2. Ins. 46 of 1907. 3. Ins. 191 and 243 of 1915. 4. Ins. 157 of 1915.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/220
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page220-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)