பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பிற்காலச் சோழர் சரித்திரம் சேந்திர சோழன் கி. பி. 1020-ல் சோழமண்டலத்தில் ஐம்பத்தோரூர்களைத் திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேயமாக வழங்கிய நிகழ்ச்சியை அறிவிப்பதாகும். ஐம்பத்தைந்து இதழ்களையுடைய இச்செப்பேட்டில் அவ்வூர்களின் பெயர் களும் நான்கெல்லைகளும் விளை நிலங்களின் கணக்கும் அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லும் காசும் அவற்றைப் பெறுதற்குரிய அந்தணர்களின் ஊர்களும் பேர்களும் பங்குகளும் விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களிலிருந்து ஆண்டுதோறும் அன்னோர் பெறும் நெல் 51050 கலமும் காசு 323-ம் ஆகும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பெரியதாகும். 1. பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய முதல் இராசேந்திர சோழன், இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை இப்பெருவேந்தன் தன் தாயிடத்திற் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும். இக்காலத்தில் கம்போடியா என வழங்கப்பெறும் காம்போச நாட்டின் மன்னன் நம் இராசேந்திரனுக்குத் தன் நாட்டிலிருந்து அழகிய தேர் ஒன்றை அன்பின் கையுறை யாக அனுப்பி இவனது பேராதரவுபெற்றுத் தனது நாட்டைப் பாதுகாத்துக் கொண்டமையும், இவ்வேந்தன் மேலைச்சளுக்கியர் தலை நகராகிய மான்யகேடத்தைக் கைப் பற்றித் தன் தந்தையாகிய இராசராசசோழனது கருத்தை நிறைவேற்றினமையும் இச்செப்பேட்டினால் அறியப்படும் புதிய செய்திகளாகும்.