பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பிற்காலச் சோழர் சரித்திரம் வில்லவர் மீனவர் வெஞ்சினச் சளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்கவீற் றிருந்த ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவி ராஜகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராஜாதி ராஜ தேவர்'1 என்பதேயாம். இவ்வேந்தன், மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியர் மூவரையும் போரில் வென்றமையும் வேணாட்டரசனையும் இராமகுட மூவரையும் தோற்றோடச்செய்து காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தமையும் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை வென்று அவ்ன் புதல்வராகிய விக்கிரமாதித்தனும், விசயாதித் தனும் புறங்காட்டி ஓடுமாறு செய்தமையும் அன்னோர் நகரமா கிய கொள்ளிப்பாக்கையை எரித்தமையும் அம்மெய்க்கீர்த்தி யில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவ்வீரச் செயல்கள் எல்லாம் கி. பி. 1044-ஆம் ஆண்டிற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அக்கல்வெட்டினால் நன்கு புலனாகின்றது. எனவே, அவையனைத்தும் இவன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் இளவரசனாயிருந்த போது புரிந்த போர்கள் என்பது ஒருதலை. அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் விளக்கப்பட்டிருத்தலால் அவற்றை அப்பகுதியிற் காண்க. இனி, இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு இவன் ஈழ நாட்டு மன்னர்களோடு போர் புரிந்த செய்தியையும் இரண்டாம் முறை மேலைச்சளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற வரலாற்றையும் கூறு கின்றது. இவனது மெய்க்கீர்த்தியில் காணப்படும் அப் பகுதி,

  • ஒருதனித் தண்டால் பொருகட லிலங்கையர் கோமகன் விக்கிரம பாகுவின் மகுடமும் முன்றனக் குடைந்து தென்றமிழ் மண்டலம்

1. S. I. I., Vol. IV, No. 537.