முதல் இராசாதிராச சோழன் 199 முழுவது மிழந்து எழுகட லீழம் புக்கவிலங் கேச னாகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்ன தாகிய கன்னக் குச்சியிலும் ஆர்கலி ஈழஞ் சீரிதென் றெண்ணி உளங்கொள் நாடு தன் னுறவொடும் புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன் தவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழி லுழந்து வெங்களத் துலந்தவச் சிங்களத் தரைசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துரைகொ ளீழத் தரைச னாகியசீர் வல்லவன் மதன ராசன் எல்லொளித் தடமணி முடியுங் கொண்டு வடபுலத் திருகா லாவதும் பொருபடை நடத்திக் கண்டர் தினகரன் நாரணன் கணவதி வண்டலர் தெரியல் மதுசூ தனென் றெனைப்பல வரையரை முனைவயிற் றுரத்தி வம்பலர் தருபொழில் கம்பிலி நகருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித்து 1' என்பதாம். இதில் குறிப்பிடப்பெற்ற இலங்கை வேந்தனாகிய விக் கிரமபாகுவை இராசாதிராசன் போரில் வென்ற செய்தி, இவன் ஆட்சியின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டி லும் காணப்படுகின்றது. அன்றியும், ஐந்தாம் மகிந்தன் மகனாகிய அவ்விக்கிரமபாகு கி. பி. 1029 முதல் 1041 வரையில் இலங்கையின் தென்கீழ்ப்பகுதியாகிய ரோகணத்தி 1. S. I. I., Nol. V, No. 978.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/229
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page229-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)