பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 இரண்டாம் இராசேந்திர சோழன் பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாயினர். சளுக்கிய தண்டநாயகனாகிய வாலாதேவனும் மற்றும் பல தலைவர்களும் கொல்லப்பட்டனர், ஆகவமல்லனும் அவன் மகன் விக்கிரமாதித்தனும் இருகையன் முதலானோரும் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டி ஓடி விட்டனர். எனவே, தம் மானத்தைக் காக்கும் பொருட்டுக் சோழரோடு போர்புரிய வந்த மேலைச் சளுக்கியர் முடக் காற்றுப் போரிலும் முழுத் தோல்வி எய்தித் தம் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடியமை குறிப்பிடத்தக்கது. இனி, முடக்காற்றுப் போரில் கலந்து கொண்டு போர் புரிந்த சோழ மன்னர்கள் யாவர் என்பதும் ஈண்டு ஆராயற்பாலதாம். அப்போர் நிகழ்ந்த போது சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக இருந்தவன் நம் இராசேந்திர சோழனே என்பது இவன் கல்வெட்டுக்களில் அந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டிருத்தலால் நன்கறியக் கிடக் கின்றது. திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கல்வெட்டொன்று, ' அடற்களிற்றால் ஆகவமல்லனை - முடக்காற்றில் முதுகிடு வித்து - மற்றவன் சயசிங்கனொடும் - வருதண்டினைப் பொருதண்டினால் - வெற்றி கொண்டு வெண்குடை நீழல் - வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளின - கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராஜமகேந்திர தேவர்' என்று கூறுகின்றது. எனவே, முடக்காற்றுப்போர் நிகழ்த்திய சோழ மன்னருள் இராசமகேந்திரனும் ஒருவன் ஆவான். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தைச் சார்ந்த பெரும்பேரூரிலுள்ள கல்வொட்டொன்று, ' முரட் சளுக்கியை முடக்காற்றில் - முதுகு கண்டு முனிவாறி - இரட்டராஜ குலகாலன் - இகல் வீரராஜேந்திரன் - புயங் கொண்டு பொது நீக்கி - ஆள்கின்ற சயங்கொண்ட சோழ மண்டலம் '2 என்று கூறுவதால் முடக்காற்றில் போர் புரிந்தவர்களுள் நம் இராசேந்திரன் தம்பியாகிய வீர 1. S. I. I., Vol. VII, No, 743. 2. Ibid. Vol. III, No. 84.