பதினான்காம் அதிகாரம் வீரராசேந்திரசோழன் கி. பி. 1063-1070 இவ்வரசரேறும் கங்கைகொண்ட சோழனுடைய புதல் வர்களுள் ஒருவன். இவன் அவ்வேந்தர் பெருமானுடைய மனைவிமார்களுள் யாருடைய மகன் என்பது புலப்பட வில்லை. செங்கற்பட்டு ஜில்லா திருமுக்கூடலிலுள்ள கல்வெட்டொன்றில் காணப்படும் ' ஸ்ரீ வீர ராஜேந்திர தேவர் ஆட்டைத் திருநாள் ஆவணித் திங்கள் திருவாயி லியத்தில் '1 ' என்ற சொற்றொடர்களால் இம்மன்னன் ஆவணித்திங்கள் ஆயிலிய நாளிற் பிறந்தவன் என்பது நன்கறியக் கிடக்கின்றது. திருவெண்காட்டில் திங்கள் தோறும் ஆயிலிய நாளில் இறைவன் திருமஞ்சனமாடித் திருவிழா எழுந்தருளுவதற்கு இவன் ஆட்சியின் இரண் டாம் ஆண்டில் நிவந்தம் விடப்பெற்றிருப்பதும் அதற்குச் சான்றாதல் காண்க. அன்றியும், திருவொற்றியூர்க் கோயிலில் ஆயிலிய நாளில் சிறப்புவிழா ஒன்று நடத்து வதற்கு இவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய சயசிங்க குலகால விழுப்பரையன் என்பவன் ஏற்பாடு செய்திருப்பதும் 3 அச்செய்தியை வலியுறுத்தி நிற்றல் அறியத்தக்கது. செங்கற்பட்டு ஜில்லா யோகி மல்லவரத்திலுள்ள கல் வெட்டொன்று இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் வரையப்பெற்றுள்ளது. அன்றியும், சித்தூர் ஜில்லா சாரால என்னும் ஊரில் கிடைத்த செப்பேடுகளி லும் இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் இவன் பெருங்கொடை வழங்கிய செய்தி குறிக்கப் 1. Ep. Ind., Vol. XXI, No. 38. 2. S. I, I., Vol. V, No. 976. 3. Ins. 136 of 1912. 4. Ins. 273 of 1904.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/260
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page260-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)