பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 251 கொண்டு நீராட்டி வழிபடுதற்கும் விழா நடத்துதற்கும் சிவ யோகிகள் முதலானோர்க்கு உணவளித்தற்கும் வேண்டும் நிவந்தங்கள் அளித்துள்ளான். திருவெண்காட்டுத் திருக் கோயிலில் பாடலாக அமைந்த கல்வெட்டொன்று இவனது தமிழ்ப் புலமையினையும் சிவபத்தியினையும் நன்கு புலப்படுத்து கின்றது. இவன் திருவொற்றியூரில் கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள கருங்கற் பீடத்தை அமைத்து அதற்கு வீரராசேந்திரன் என்று பெயரிட்டுள்ளமை இவன் வேந்தன் பால் வைத்திருந்த பேரன்பினை விளக்குவதாம்.2 இச் செயல்களை நோக்குமிடத்து இவன் வீரராசேந்திர சோழ னுடைய அதிகாரிகளுள் ஒருவனாதல் வேண்டுமென்பது பெறப்படும் இனி, இவ்வேந்தனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற இவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக் களில் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு குறிப்பிடப் பெற்றிருத்தலால் இவன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற் பகுதியில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1067-ல் தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திர சோழன் என்னும் அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தனன். இவன் கி. பி. 1070-ன் தொடக்கத்தில் இறந்தவுடன் அவ் வதிராசேந்திர சோழனே முடிசூட்டப் பெற்றான். வீரராசேந்திரன் இறந்தவுடன் சோணாட்டில் முடிசூடும் உரிமைபற்றிக் கருத்து வேறுபாடு தோன்றிக் கலகம் உண்டாயினமையின் சளுக்கிய விக்கிரமாதித்தன் விரைந்து வந்து அக் கலகத்தை யடக்கித் தன் மைத்துன னாகிய அதிராசேந்திரனுக்கு முடிசூட்டிச் சென்றான் என்று விக்கிரமாங்க தேவசரிதம் கூறுகின்றது. அதனை அடுத்த அதிகாரத்தில் ஆராய்ந்து உண்மை காண்போம். 1. செந்தமிழ், தொகுதி 14, பக். 364-65. 2. Ins. No. 217 of 1912. 3. S. I. I., Vol. III, No. 57; Ibid, Vol, VIII, No. 4.