பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராசேந்திர சோழன் 259 நடைபெற்றன என்று கொள்வதும் ஏற்புடைத்தன்று. எனவே, வைணவர்களால் உள் நாட்டில் ஏற்பட்ட கலகத் தில் இவ்வரசன் கொல்லப்பட்டான் என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை என்பது உணரற்பாலதாகும். இனி, முதற் குலோத்துங்க சோழன், தான் சோழ நாட்டைக் கவர்ந்துகொள்ளும் பொருட்டு உள் நாட்டில் கலகம் நிகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். 1 தம் வரலாற்று நூலின் தலைவனாகிய சளுக்கிய விக்கிரமாதித்தனைப் புனைந்துரை வகையில் பலபடப் பாராட்டியும் அதற்கு முரணாக முதற் குலோத்துங்க சோழனுடைய ஆற்றல் வீரம் முதலானவற்றைக் குறைத் தும் குணஞ் செயல்களை இழிவுபடுத்தியும் கூறுவதையே தம் கொள்கையாகக்கொண்ட பில்ஹணர் என்னும் வட மொழிப் புலவர், அவன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டிருந்தால் அவன் செய்கையைத் தம் நூலிற் கூறாமற் போகார் என்பது ஒருதலை. இவன் உள் நாட்டுக் கலகத்தில் கொல்லப் பட்டான் என்று கூறும் அப்புலவர், அச்செய்கையைக் குறிப் பிடாமையொன்றே குலோத்துங்கனுக்கும் அதிராசேந்திர னுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதையும் அவனால் இவ்வேந்தன் கொல்லப்படவில்லை என்பதையும் நன்கு புலப்படுத்தா நிற்கும். ஆகவே, குலோத்துங்க சோழன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ நாட்டைக் கவர்ந்துகொண்டான் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. அதற்குக் காரணம், இவன் சில திங்கள்கள் மாத்திரம் ஆட்சிபுரிந்துள்ளமையேயாகும். வட ஆர்க்காடு ஜில்லா 1. Anual Report on Epigraphy for 1904, page 11.