சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் 273 புக்கவிலங் கேச னாகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்ன வாக்கித்தன் கன்னகுச் சியினும் ஆர்கலி யீழஞ் சீரிதென் றெண்ணி உளங்கொளந் நாடுதன் னுறவொடும் புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன் றவ்வையைப் பிடித்துத் தாயைமூக் கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்களத் துலந்தவச் சிங்களத் தரசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துரைகொளீழத் தரசனா கியசீ வல்லவ மதன ராசன் மெல்லொளித் தடமணி முடியுங் கொண்டு வடபுலத் திருகா லாவதும் பொருபடை நடாத்திக் கண்டர் தினகரன் நாரணன் கணவதி வண்டலர் தெரியன் மதுசூ தனனென் றெனைப்பல வரைசரை முனைவயிற் றுரத்தி வம்பலர் தருபொழிற் கம்பிலி நகருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவர் மீனவர் வேள் குலச் சளுக்கியர் வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சிந்துர ரையணர் சிங்களர் பங்களர் அந்திரர் முதலிய வரைசரிடு திறைகளும் ஆறிலொன் றவனியுட் கூறுகொள் பொருள்களும் உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து விசுவலோ கத்தும் விளங்கமனு நெறிநின் றசுவமே தஞ்செய் தரைசுவீற் றிருந்த சயங்கொண்ட சோழனுயர்ந்த பெரும்புகழ்க் கோவிராச கேசரி வர்மரான உடையார் ஸ்ரீராசாதிராச தேவர்க்கு யாண்டு மரான 18
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/303
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page303-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)