282 பிற்காலச் சோழர் சரித்திரம் செங்கோல் செலுத்தி............. வேத நீதியை விளக்கி மீதுயர் வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும் ஏற்பவர் வரு கென்று நிற்பக் கோத்தொழில் உரிமையி னெய்தி அரைசு வீற்றிருந்து மேவரு மனுநெறி விளக்கிய கோவிராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீவீர ராசேந்திர தவேர்க்கு யாண்டு'. வீரமே துணையாகவும் தியாகமே யணியாகவும் செங் கோலோச்சிக் கருங்கலி கடிந்து கூடல் சங்கமத்து ஆகவ மல்லனை அஞ்சுவித்து விக்கலனையும் சிங்கணனையும் உடை புறங்கண்டு மற்றவன் மாதேவியரோடும் வஸ்து வாகனங் கைக்கொண்டு இரண்டாம் , விசையிலும் குறித்த களத் தாகவமல்லனை அஞ்சுவித்து வேங்கை நாடு மீட்டுக்கொண்டு தன்னுடன் பிறந்த முன்னவர் விரதமுடித்து மூன்றாம் விசையிலும் சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம் கம்பிலி சுட்டுக் கரடிக் கல்லில் செயத்தம்பம் நாட்டித் தேவநாதன் முதல் சாமந்தரைச் சக்கரக்கோட்டத்துத் துரத்தி யவர்கள் உரிய தாரம் பிடித்துக்கொண்டு கன்னக் குச்சி மீட்டு எல்லைகெடாது நிலையிட்டு விசய சிம்மாசனத்து உலக முழுதுடை யாளோடும் வீற்றிருந்தருளிய கோராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ வீரராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page312-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)