பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பிற்காலச் சோழர்சரித்திரம்

தனன் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் 1 உணர்த்து கின்ற ன. கி. பி. 825 முதல் கி. பி. 847 வரையில் ஆட்சி புரிந்த தெள்ளாறு எறிந்த நந்திவர்மன், சோழன் ஒருவனைப் போரில் வென்றான் என்று அவன் மீது பாடப்பெற்ற நந்திக்கலம்பகம் என்ற நூல் கூறுகின்றது. 2 எனவே, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரையில் குறுநில மன்னரா யிருந்த சோழர், சில காலங்களில் பாண்டியர்க்கும் சில காலங்களில் பல்லவர்க்கும் திறை செலுத்திக்கொண்டு அவர்கட்கு அடங்கி வாழ்ந்து வந்தனர் என்பது உய்த் துணரப்படுகிறது.

இதுகாறும் விளக்கியவாற்றால் சோழர், தம் வலி குன்றியிருந்த காலத்தில் வேறு நாடுகட்குப் போகவில்லை என்பதும் சோழ நாட்டிலே யுள்ள பழையாறை நகரில் சிற்றரசராயிருந்து வந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காண்க.

இஃது இங்ஙனமாக, சோழர் குறு நில மன்னராயிருந்த காலத்தில் கடப்பை கர் நூல் ஜில்லாக்களுக்குச் சென்று அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பது சில வர லாற்று ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். அவர்கள் அவ்வாறு கருதுவதற்கு இரு காரணங்கள் சொல்லப்படு கின்றன.

ஒன்று, சீன வழிப்போக்கனாகிய ஹியூன்சாங் என் பவன் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத் துக்கு வந்து சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்பியபோது, சோழ நாடு காஞ்சீபுரத்திற்கு வடமேற்கே இருப்பதாகத் தன் யாத்திரைக்குறிப்பில் வரைந்திருப்பது. மற்றொன்று


1. S. I. I, Vol. III, No. 206. 2. நந்திக்கலம்பகம், பாடல்கள் 14, 27, 31, 42, 81, 3. Historical Sketches of Ancient Dekhan, pp. 205 & 206