பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழன் விசயாலயன்

19

இவ்வேந்தன் தன்பகைஞர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர்களோடும் நிகழ்த்திய போர்கள் பலவாகும். இவன் சோழ இராச்சியத்திற்கு அடிகோலிய முதல் மன்னனாதலின் தன் வாழ்நாள் முழுமையும் பகைஞர்களோடு போர் புரிந்து காலங் கழிக்கவேண்டிய நிலையில் இருந்தனன். கடைச் சங்கத்திறுதிக் காலத்திலிருந்த சோழன் செங்கணானுக்கும் கி, பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்த முதல் ஆதித்த சோழனுக்கும் இடையில், மார்பில் தொண்ணூற்றாறு புண் கொண்ட வென்றிப் புரவலன் என்ற சோழ மன்னன் ஒருவன் மூவருலாக்களில் ஒட்டக்கூத்தரால் புகழ்ந்து பாராட்டப் பட்டுள்ளனன்.!


1. (1) மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்-மீதெல்லாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனுங்--கண்கொண்ட கோதிலாத்தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும்" (விக்கிரம சோழன் உலா, 27-32)

2.அணங்கு படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்--அடுத்தடுத்துச் சீறுஞ்செருவிற் றிருமார்பு தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆரத்தோன்--வேறு பிரம வரக்கன் அகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் (குலோத்துங்க சோழன் உலா, 38--44)

(3) "நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன்--புல்லார் தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறுந் தழும்புடைய சண்டப்ர சண்டன்--எழும்பகல் ஈழ மெழு நூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன்" (இராசராச சோழன் உலா; 35--40)