பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பிற்கால சோழர் சரித்திரம்

கங்க! நாட்டு அரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜித வர்மனுக்கு உதவி புரியும் பொருட்டுப் படை திரட்டிக்கொண்டு சோழ நாட்டிற்கு விரைந்து வந்தான். எனவே, சோழன், பல்லவன், கங்கன் ஆகிய மூவேந்தரும் ஒருங்கு சேர்ந்து பாண்டி வேந்தனை எதிர்த்தனர். கும்பகோணத்திற்கு வட மேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையிலுள்ள திருப்புறம்பயத்தில் 2 பெரும் போர் நடைபெற்றது. போர்க்களத்தில் இருமருங்கிலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். பல்லவ மன்னனுக்கு உதவி புரியவந்த கங்க அரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் பெரு வீரத்துடன் போர்புரிந்து அபராஜிதவர்மன் வாகை சூடி மகிழும்படி செய்தான். அத்தகைய பெருவீரன் போர்க்களத்தில் இறுதியில் கொல்லப்பட்டான் . எனி னும், வரகுண பாண்டியன் தோல்வியுற்றுச் சோழ நாட்டைவிட்டு ஓடும் நிலையை எய்தினான். அபராஜித வர்மனும் ஆதித்தனும் வெற்றிபெற்றனர். இந்நிகழ்ச்சி யில் மகிழ்ச்சியுற்ற அபராஜிதவர்மன், தன்னாட்சிக்குட் பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியையும் ஆதித்தனுக்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடம் உளது. இத்திருப்புறம்பயப் பெரும் போரில் அபராஜித வர்மன் வெற்றி பெற்றனனாயினும் அவனது படைப் பெருக்கம் இப்போர் நிகழ்ச்சியினால் ஒருவாறு குன்றி விட்டது எனலாம். அந்நிலையில் அவன் தொண்டை மண்டலத்தையும் சோணாட்டுப்பகுதியையும் ஒருங்கே ஆளுதல் எங்ஙனம் கூடும்? ஆதலால், அவன் தன் ஆளு கைக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியை ஆதித்த சோழ னுக்கு அளித்துவிட்டுத் தொண்டை மண்டலத்தையும்


1. கங்க நாடு என்பது மைசூர் இராச்சியத்தின் தென்பகுதியும் சேலம் ஜில்லாவின் வடபகுதியும் அடங்கிய நாடாகும். அதனை ஆட்சி புரிந்தவர் கங்கர் மரபினராவர். 2. Udayendiram Plates of Prithivipati il, Verse 18. (S. I. I., Vol. II, No. 76.) 3. S. I. 1., Vol. II, page 387.