பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்காம் அதிகாரம்
முதல் ஆதித்த சோழன் கி. பி. 871-907

வன், தன் தந்தை விசயாலய சோழன் கி. பி. 881-ல் இறந்தவுடன் சோழ நாட்டில் முடிசூடி அதன் ஆட் சியை ஏற்றுக்கொண்டனன். இவன் தந்தை பரகேசரி யாதலின், இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டு அரசாண்டான். இவனுக்குக் கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது கன்னியா குமரிக் கல்வெட்டால் புலனாகின்றது' .

இவன், பல்லவ மன்னனாகிய அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிக்கொண் டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின் றன 2. அதற்கேற்ப இவனது ஆட்சியின் இருபத்து மூன்றாம் ஆண்டு முதல்தான் இவன் கல்வெட்டுக்கள் தொண்டைமண்டலத்தில் காணப்படுகின்றன 3. அவற் றுள், திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டு, ஈண்டுக் குறிப் பிடத்தக்கதொன்று 4. அது, பல்லவ அரசர்களான கந்த சிஷ்யனும் வாதாபிகொண்ட நரசிங்கவர்மனும் திருக் கழுக்குன்றத்துச் சிவபெருமானுக்கு அளித்திருந்த இறை யிலி நிலத்தை ஆதித்தன் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு தன் ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் உறுதிப்படுத்திய செய்தியை உணர்த்துகின் றது. இவ்வாறு இவ்வேந்தன் செய்தமைக்குக் காரணம் தொண்டைமண்டல ஆட்சியில் ஏற்பட்ட மாறுதலேயாம்.


1. Travancore Archaeological Series Vol. III, No. 34, Verse 55 2. S. I. I., Vol. III. No. 205, Verse 49. 3. Ibid, Nos. 1 and 93; Ibid, Vol V, No. 1368; Ibid, Vol. VI, No. 360. 4. Ep. Ind., Vol, III, No. 38A.