பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் ஆதித்த சோழன் 35 பொன்னும் கொடுத்துள்ளனள். இவள் பல்லவர் குடியில் தோன்றியவள் என்பது திருப்பழனத்திலுள்ள ஒரு கல்வெட் டால் புலனாகின்றது.. இவ்வேந்தர் பெருமானுக்குப் பராந்தகன், கன்னர தேவன்? என்ற இரு புதல்வர் உண்டு. அவர்களுள் பராந் தகனே இவனுக்குப்பிறகு பட்டம் பெற்றவன். ஆதித்த னுடைய இரு மனைவியருள் அப் பராந்தகன் யாருடைய புதல்வன் என்பது புலப்படவில்லை. கிருஷ்ண தேவன் என்பது கன்னடமொழியில் கன்னரதேவன் என்று வழங் கும். எனவே கி. பி. 878 முதல் கி. பி. 913 வரையில் குந்தள நாட்டில் அரசாண்ட இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவன் மகளும் ஆதித்தனுடைய பட்டத்தரசியுமாகிய இளங்கோப்பிச்சியின் மகனே அக்கன்னர தேவன் என்பது நன்கு துணியப்படும் . ஆகவே, அவனுக் குத் தாய்ப்பாட்டன் பெயர் இடப்பட்டிருத்தல் அறியத்தக்கது. ஆதித்தனுக்குப் பிறகு பட்டத்தரசியின் புதல்வனாகிய கன்னர தேவன் பட்டம் பெறாமைக்குக் காரணம் தெரியவில்லை. ஒருகால், அவன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே இறந்திருத்தல் வேண்டும்; அவ்வாறு இறந்திலனாயின் பராந் தகனுக்குத் தம்பியாயிருந்திருத்தல் வேண்டும். அதுபற்றியே, ஆதித்தன் வயதில் மூத்தவனும் பேராற்றல் படைத்தவனு மாகிய பராந்தகனுக்குச் சோணாட்டு ஆட்சியை அளித்திருத் தல் வேண்டும் என்பது திண்ணம். கன்னரதேவனுக்குப் பூதிமாதேவ அடிகள் என்ற மனைவி யொருத்தி இருந்தனள் என்பது அந்துவ நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படு கின்றது . அவள் கொடும்பாளூரிலிருந்த குறு நிலமன்னன் ஒருவனுடைய மகள் ஆவள். 1. Ins. 100 of 1931; S. I, I., Vol. XIII, No. 351. la. S.I.I., Vol. XIII, No. 304; M.E.R. for 1928, part II, para 2. 2. S. I. I., Vol. V, No. 595, 'சோழ பெருமானடிகள் மகனார் ஆதித்தன் கன்னரதேவன்' 3. Ep. Ind., Vol: XXVI, pp. 233 and 234. 4, S. 1. I., Vol. VIII, No. 665.