முதற் பராந்தக சோழன் 39 I பேடுகளிலும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் காணலாம். இலங்கைப் படைத் தலைவனாகிய சக்கசேனாபதி என்பான் மறுமுறையும் பராந்தக சோழனோடு போர்புரிய முயன்றபோது அவன் ஒருவகை நோயினால் இறந்து போனான் என்றும் அதனையறிந்த இலங்கைவேந்தன் எஞ்சி யிருந்த ஈழப்படையைத் தன் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது 1. ஆனால், இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இச்செய்தி காணப்படவில்லை. இப்போரில் பராந்தக சோழனோடு சேர்ந்துகொண்டு பாண்டியனை எதிர்த்துப் போர்புரிந்தோர் கொடுப்பாளூர்க் குறுநில மன்னனும் கீழைப் பழுவூரிலிருந்த சிற்றரசனாகிய பழுவேட்டரையன் கண்டன் அமுதனும் ஆவர் 2. சோழ மண்டலத்துப் பாம்புணிக்கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும் 3 பரதூருடையான் நக்கன் சாத்த னும் பராந்தக சோழனுக்குப் படைத்தலைவராக இருந்தனர். இனி, இராசசிம்ம பாண்டியனது சின்னமனூர்ச் செப் பேடுகள் அவன் கொடும்பாளூர்த் தலைவனையும் தஞ்சை மன்னனையும் போரிற் புறங்கண்டான் என்று கூறுகின் றன 4. எனவே, இராச சிம்மனுக்கும் பராந்தகனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் கூடும். அவற்றுள் சிலவற்றில் அவன் வெற்றி எய்தியிருத்தலும் இயல்பே. இறுதியில் வெள்ளூரில் நடைபெற்ற பெரும்போரில் இராச சிம்மன் தோல்வியுறவே பராந்தகன் வெற்றிபெற் றுப் பாண்டிமண்டலத்தைக் கைப்பற்றினான். இவன் 1. The Colas, Vol. I, pp. 144 and 145. 2. Ins. 231 of 1926. 3. S. I. I., Vol. III, No. 99. 4. Ibid, No. 206.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page65-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)