பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் 47 கொண்டுவந்து தன் வீரமும் ஆணையும் யாண்டும் பரவ ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் வட புறத்தில் பெருவேந்தரா யிருந்து அரசாண்டவர் இராஷ்டிர கூட மரபினர் ஆவர். இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ண தேவன், தன் மகள் இளங்கோப் பிச்சியை முதல் ஆதித்த சோழனுக்கு மணஞ்செய்து கொடுத்த செய்தி முன் கூறப்பட்டது. எனவே, ஆதித் தன் காலத்தில் சோழரும் இராஷ்டிரகூடரும் நெருங்கின உறவினாற் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தேற்றம். கி. பி. 913-ஆம் ஆண்டின் இறுதியில் இராஷ்டிரகூட வேந்தன் இரண்டாம் கிருஷ்ணன் இறக்கவே, அவன் பேரன் மூன்றாம் இந்திரன் என்பான் அரசுகட்டில் ஏறி னான். 1 அவ்விந்திரனுக்கு நான்காம் கோவிந்தன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன், வனப்பில் காமவேள் போன்றவன். 2 இந்திரனும் கி. பி. 918-இல் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டியிருந்தான். 3 அவ்விராஷ்டிரகூட அரசகுமாரனுக்கு நம் பராந்தக சோழன் தன் மகள் வீர மாதேவியை மணஞ்செய்து கொடுத்து அவ்வரச குடும் பத்தை நெருங்கிய உறவினாற் பிணித்துக்கொண்டான். 4 தன் தந்தை இறந்த பின்னர், நான்காம் கோவிந்தன் குந்தள நாட்டில் முடி சூடி, கி. பி. 934 வரையில் ஆட்சி புரிந்தான். அந் நாட்களில் அவன் செயல்கள் பொது மக்கட்கு மிக்க வெறுப்பை யுண்டுபண்ணின. அன்றி யும், குறு நில மன்னர்களும் அரசாங்க அலுவலாளர்களும் அவன் செய்கைகளைப் பெரிதும் வெறுத்து அவன்பால் அன்பில்லாதவராயினர். 5 ஆகவே, குந்தள இராச்சியத் தில் அவனுக்கு ஆதரவு வரவரக் குறைந்து கொண்டே வந்தது எனலாம். அந் நாட்களில் கீழைச் சளுக்கிய 1. The Rashtrakutas & Their Times, pp. 99 and 100 2. Ibid, page 106. 3. Ep. Ind., Vol. XXVI, pages, 163 and 230. 4. Ibid, pages 230--235. 5. Ep. Ind., Vol. XXVI, page 232.