58 பிற்காலச் சோழர் சரித்திரம் திருவாவடுதுறை, திருசெந்துறை, உறுமூர் ஆகிய ஊர்களி லுள்ள சிவன் கோயில்கள் கற்றளிகளாக ஆக்கப்பட்டன. அவற்றுள் திருவாவடுதுறைக் கோயில்! இவன் பொருளுதவி கொண்டு திருக்கற்றளிப் பிச்சன் என்ற படைத்தலைவனால் எடுப்பிக்கப் பெற்றது. திருச்செந்துறைக்கோயில்,2 இவன் புதல்வன் அரிகுலகேசரியின் மனைவியாகிய பூதி ஆதித்த பிடாரியால் கட்டப்பட்டது. உறுமூர்க்கோயில்3 இப் மன்னன் ஆணையின்படி இருங்கோளன் குணவன் அபராசிதன் என்ற தலைவன் ஒருவனால் அமைக்கப்பெற்றது. சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ளதும் இந்நாளில் காட்டு மன்னார்கோயில் என்று வழங்குவதும் ஆகிய வீரநாராயணச் சதுர்வேதிமங்கலமும் அதற்கு வடக்கேயுள்ள வீரநாரா யணன் ஏரியும் இவன் அமைத்தனவேயாம். அன்றியும், சோழசிங்கபுரத்திற்கு அண்மையில் சோழவாரிதி5 என்னும் ஏரி ஒன்று இவன் ஆட்சிக்காலத்தில் தோண்டப்பெற்றது. இம்மன்னன். தன் வாழ்நாளில் ஏமகர்ப்பம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன, இவன் காலத்தில் குடவோலை பறித்துக் கிராம சபை உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்கும் முறையும் கிராம சபை அமைக்கும் முறையும் கிராம ஆட்சி முறையும் எவ்வாறிருந்தன என்பது செங்கற்பட்டு ஜில்லா உத்தரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட் டுக்களால்' புலப்படுகின்றது. அவை, இவ்வேந்தனது 1. Ins. 126 of 1925 and 143 of 1925. 2. S. I. I. Vol. III, No. 96. 3• Ins. 384 of 1913. 4. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 60. 5. Ep. Ind., Vol. IV, pp. 221-25. 6. S. I. I., Vol. II, No. 76. 7. Archaeological Survey of India, 1904-05.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page85-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)