60 பிற்காலச் சோழர் சரித்திரம் எய்தியிருத்தல் வேண்டும்; இராமனைப்போல் ஈழநாட்டில் போர் நிகழ்த்தி வென்றமையால் சங்கிராமராகவன் என்ற பெயர் பெற்றான். பாண்டி மண்டலத்தின்மீது படையெடுத் துச் சென்று அதனை வென்று சோணாட்டோடு சேர்த்து அரசாண்ட காரணம்பற்றி இருமடிசோழன் என்று வழங்கப் பெற்றனன். பராந்தகனுக்குத் தேவிமார் பலர் இருந்தனர். அவர்களுள் இராசாதித்தன் தாயாகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேரமன்னன் மகள் என்பது உதயேந்திரச் செப்பேடுகளால் உணரப்படுகின்றது.. பராந் தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியா யிருந்தனள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படு கின்றது.' அவள் மழ நாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரச குமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பராந்தக னுடைய மற்ற மனைவியர், அருமொழி நங்கை 4, வில்லவன் மாதேவி,5 திரிபுவனமாதேவி, வளவன்மாதேவி 7, சோழசிகா மணி, சோழமாதேவி 9, தென்னவன்மாதேவி10 என்போர். - பராந்தகனுக்கு நான்கு புதல்வரும் இரு மகளிரும் இருந்தனர், அவர்களுள், இராசாதித்தன், கண்டராதித்தன் 1. S. I. I., Vol. JI, No. 76. 2. Ibid. - 3. Ep. Ind., Vol. XV, No. 5. 4. S. I. I., Vol. VII, No. 520. 5. 1bid, Vol. III, No. 110. 6. Ins. 130 of 1931; S. I. I., Vol. V, No. 541. 7. Ibid, No. 547. 8. S. I. I., Vol. V, No. 525. 9. Ibid, No. 524. 10. Ibid. No. 601.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page87-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)