பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநாயக வணக்கம் 8 விநாயக வணக்கம் நீண்ட நாளாகவே தமிழ் நாட்டில் நிலைத்திருக்கிறது. அது மட்டுமல்ல ; எந்த தெய்வ வழிபாடும் விநாயக வணக்கத்தை முதன்மையாக வைத்தே நடந்து வருகிறது. விநாயகரை வனங்காமல் ஆரம்பித்த காரியங்கள் முட்டின்றி நிறைவேறுவதில்லை. நிரம்பச் சொல்வானேன். திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட சிவபிரான் விநாயகரை வணங்காமல் புறப்பட்டுவிட்டார். அவ்வளவுதான் ; தேரின் அச்சு முறிந்துவிட்டது. விநாயக வணக்கம், செய்த பின்பே தேர்நகர்ந்தது ; திரிபுர தகனமும் நிகழ்ந்தது. சிவபிரானும் திரிபுராந்தகர்' என்று பெயர் பெற்றார். தந்தை பாடுதான் இப்படியென்றால் தம்பி பாடும் இதே கதைதான். கோலக் குறமகள் வள்ளியை மணக்க விரும்பிய குமரனும் அண்ணன் விநாயகரை மறந்துவிட்டான். அவ்வளவு தான் , அவன் எண்ணம் நிறைவேறுவதாகக் காணேம். எத்தனையோ இடையூறுகள் வள்ளியை மணக்க கடைசியில் உணர்ந்தான் முருகன் தன் தவறை. அண்ணாவைப் பிரார்த்தித்தான் அன்போடு. அவரும் சமய சஞ்சீவியாக யானை உருவிலேயே வந்து, தம்பி விரும்பிய பெண்ணை ஆம், வள்ளியை அவனுக்கு மணம் முடித்து வைக்கிறார். சரிதான், எல்லாத் தேவர்களும் . ஏன்? எல்லா மனிதர்களுமே பிள்ளையார் குட்டு குட்டி விட்டுத்தான் தங்கள் காரியங்களைத் துவக்குகிறார்கள். பிள்ளை யார் சுழி போடாமல் எதையுமே எழுதத் தமிழன் முனைவதில்லை. இப்படி முன்னவர்க்கும் முன்னவனாய் நிற்கின்றவர் பிள்ளையார். அதனால்த்தான், சிவன் கோயிலில் மட்டுமல்ல விஷ்ணு கோயிலிலுமே அக்ரஸ் தானம் கிடைத்துவிடுகிறது அவருக்கு. சிவன் கோயிலில் பிள்ளையாராக, விநாயகராக, கணபதியாக முன் நிற்பவர்தான், பெருமாள் கோயிலில் தும்பிக்கை ஆழ்வராக, கோபுர வாயிலிலேயே அமர்ந்துவிடுகிறார் ; எல்லோரும் வணங்கும் முதல் தெய்வமாக ஆகிவிடுகிறார். இப்படி, தமிழ்நாட்டிலே காணும் விநாயக வணக்கம் - பிற நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. கடல் கடந்தும் சென்றிருக்கிறது. எல்லோராக் குகையில் எழுந்தருளியதோடு நின்றுவிடாமல், குஜராத்திலும் ஜைனர்கள் வண்ங்கும் மூர்த்தியாக அமைந்துவிடுகிறார் இவர் ஜைனர்கள் மாத்திரம் என்ன, பெளத்தர்களுமே விநாயகரை வணங்கி வருகிறார்கள், கணபதி இருதயம் என்னும் மந்திரத்தை உருவேற்றுகிறார்கள். இத்துடன் ஜாவாவில், ஜப்பானில், சைனாவில்