பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

லிருந்து ராஜா இறங்கியதைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஒன்றுமே புரியாமல் ஒரே வியப்பாக இருந்தது.

'ஒடிப்போன ராஜாவுக்கு ஒன்பதாம் இடத்தில் வியாழன், இருந்திருக்கிறார்’ என்பதை அவர்கள் எப்படி அறியமுடியும்! "அதிர்ஷ்டசாலியான பிள்ளையைப் பெற்றிருக்கிறீர்கள், ஸார்!" என்று கூறிக்கொண்டே போட்டிக் கம்பெனி மானேஜர், ராஜாவுக்குச் சேர வேண்டிய முதற்பரிசுத் தொகை முழுவதற்கும் ஒரு செக் எழுதி, பலர் முன்னிலையில் ராஜாவின் தந்தையிடம் நீட்டினர். ஆனால், அத்துடன் அந்த மானேஜர் நிறுத்திவிடவில்லை. ராஜாவைப் போட்டியில் சேரத் தூண்டிய ஆசைப் பொருளை அவர் மறப்பாரா? மூன்று அழகிய பேனாக்களை எடுத்து, ரவி, பிரேமா, ராஜா ஆகிய மூவருக்கும் ஆளுக்கொன்றாய் அளித்துவிட்டுத்தான் விடைபெற்றுச் சென்றார்.

ராஜாவின் திடீர் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஊரே வியந்தது. பெற்ற வயிறு குளிரத் தாய் அவனை ஓடிவந்து அனைத்துக்கொண்டாள், வறுமை என்னும் குட்டையில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த தங்கள் குடும்பத்தை உயர்த்த, தெய்வமாக வந்த பிள்ளையைப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது அந்தத் தாயுள்ளம்.