பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

☐ வந்து நேரில் அதற்கு நான் காரணமல்ல என்று வாய் திறந்து சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை காரணமாக, அவர்கள் அவ்விதம் கூறுகிறார்கள் என நினைக்கிறேன். குடும்பங்களில் பெருக வேண்டியது நல்வாழ்வு! குடும்பங்களில் பெருக வேண்டியது வளம்! குடும்பங்களில் பெருக வேண்டியது அறிவாற்றல்! குடும்பங்களில் பெருக வேண்டியது விவேகம்! குடும்பங்களில் பெருக வேண்டியது விஞ்ஞானம், குடும்பங்களில் பெருக வேண்டியது மற்றவர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்கிற அருங்குணம்! ற புதுமை! ஆனால் இன்று குடும்பங்களில் பெருகிக் கொண்டிருப்பது என்ன என்பது அவரவர்களுக்குத் தெரியும். அதைக் குறைத் துக்கொண்டு அரசோடு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த அரசு எல்லா வகையிலும் கிராம மக்களுடைய நல் வாழ்வை மையமாக வைத்து, திட்டங்களைத் தீட்டி, அவர் களுடைய எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. அதற் காக ஆற்றப்படுகிற பணிகள் அத்தனைக்கும் அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.