பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவிலேயே முன் நிற்கிறேம் இன்று நல்லறம் நடத்தவிருக்கின்ற அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் இல்லங்கள் சின்னச் சின்ன வீடுகள். அதிலே நீங்கள் பிள்ளைகளை அதிகமாகப் பெற்றுவிடா மல், வீட்டு நெருக்கடியை - அதன் இடத்தை உணர்ந்து குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டத்தை அனுசரித்து, சுகாதார மாக ருக்க, தூய்மையாக இருக்க, இருக்க, நல்ல புழக்கத்திற்கு வசதியாக அந்த வீட்டில் எத்தனை குழந்தைகள் நடமாடினால் தாங்கும் என்பதை எண்ணிப்பார்த்து உங்களுடைய வாழ்க் கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசின் திட்டங்கள் ஒழுங்காகச் செயல்பட முடியும். எப்படி வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றில் தமிழ் நாடு மற்ற மாநிலங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறதோ, அதைப்போல குடும்பக் கட்டுப்பாடு வெற்றிகரமாக நடைபெறுவதிலும், இன்று இந்தியாவிலேயே தமிழ் நாடு முன் நிற்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்து, அதிலே மேலும் மேலும் நல்ல வெற்றிகளை நாம் எய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.