பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒரு புள்ளியோ குறையுமேயானால், இந்த 39-க்கும் ஆபத்து வரக்கூடும்.அதிலேகூட ஒன்றிரண்டு குறையக்கூடும்.நம்முடைய தமிழ்நாட்டின் சார்பில் உறுப்பினர்கள் 41பேர் இருந்தோம்.இன் றைக்கு 41, 39 ஆகக் குறைந்ததற்குக் காரணம் இங்கே குடும்ப நலத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தொகைக் குறைந்த தால், இரண்டு எண்ணிக்கைக் குறைந்தது. நாடாளுமன்றத் தில். மேலும் எண்ணிக்கைக் குறையுமோ என்ற அச்சம் நம்மையெல்லாம் இன்றைக்கு ஆட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அச்சம் போக்கப்படவேண்டும் என்பது மாத்திரமல்ல. ஏற்கனவே இருந்த 41 இடங்கள் நம்முடைய தமிழ் நாட்டிற்கு வேண்டுமென்று, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் தில்லி சர்க்காரை நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். 1951-52-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேதான் நாடாளுமன்றத்திலே உறுப்பினர்கள் தொகை வகுக்கப்பட வேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டி ருக்கிறோம். அதற்கு மத்திய சர்க்கார் இணங்கிடவேண்டும். தமிழ்நாட்டு மக்களுடைய இந்த ஒருமித்த குரலுக்கு அவர்கள் செவிசாய்க்க வேண்டும் என்று நான் எடுத்துச் சொல்வேன். நம்முடைய எண்ணிக்கையைக் குறையாமல் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கின்ற உரிமைக்குரல் ஒருபுறத்திலே இருக்கிற அதே நேரத்தில், நாம் குடும்பநல வாழ்விலும்- குடும்பநலத் திட்டத்திலும் மேலும் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும் என்பதைத் தயவு செய்து யாரும் மறந்துவிடக் கூடாது. வீட்டு நிம்மதி ற - - வீடுதான் நாட்டினுடைய ஆரம்பத் தளமாகும். வீடுகளில் நல்விளக்கு எரிந்து -- வீடுகள் பிரகாசமாக இருந்து வீடுகளில் நிம்மதி இருந்து - வீட்டிலே இருப்பவர்கள் மகிழ்ச்சியிலே திளைத்தால்தான், அது நாட்டில் எதிரொலிக்கும். இன்றைக்கு வீடுகள் அவ்வாறில்லை. நல்ல தொழிலே இருந்தாலும், வசதி வாய்ப்புக்கள் அந்தக் குடும்பத்திற்கு இருந்தாலும், அளவோடு குழந்தைகள் அந்தக் குடும்பத்திலே இருந்தால்தான் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால்தான், தாய் தகப்ப னுக்கு நிம்மதி இருக்கும் என்பதை ஒவ்வொரு குடும்பத்திலும் நாம் காணமுடியும். அந்த நிம்மதி ஏற்படவேண்டுமேயானால் குடும்பம் அளவானதாக இருக்க வேண்டும். வசதியும் வாய்ப் பும் உள்ள குடும்பத்திலேயே இரண்டு மூன்று குழந்தைகளுக்கு மேல் இருத்தல் ஆகாது என்கின்ற சலிப்பு ஏற்பட்டு கின்ற நேரத்தில், சாதாரணமான குடும்பங்கள் குடும்பங்கள் - சாமான்ய மக்களுடைய குடும்பங்கள் -ஏழை எளியவர்களுடைய குடும் பங்கள் ஆகியவற்றில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே யிருந்தால் ஆண்டுதோறும் குழந்தைகள் அந்த இல்லத்திலே பிறந்துகொண்டே இருந்தால், முதல் குழந்தை பிறந்த நேரத் தில் அதற்கு நல்ல கவனிப்பிருக்கும்! அடுத்த குழந்தை பிறந்த - விடு