பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கடல்களை மூன்று பக்கமும் எல்லையாக கொண்டிராமல் கடலின் மீது மிதக்கும் ஒரு தெப்பமாக இந்தியா இருந்திருந் தால், இந்நேரம் கடலுக்குள் மூழ்கியிருக்கும் மக்கள் தொகை தாங்காமல்! அந்த அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு ஆண்டவன் மீது பழியைப்போட்டு விட்டு, 'அவன் கொடுத்தான் நாமென்ன செய்ய' என். று குடும்பத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய நாட்டில்! ஆண்டவர்களிலே கூட சிவனுக்கு இரண்டு பிள்ளைகள் தான்! இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்ற குசேலர் தந்த அவ லுக்குப் பதிலாக, மாடமாளிகை, கூடகோபுரங்களைப் பரிசாக அளிக்க ஒரு கண்ணன் இருந்தான். அந்தக் கண்ணன் கூட எல்லோருக்கும் அருள முடியுமா? எப்போதும் அருள முடியுமா? குழந்தைகளும் குடிசையும் ந்தைகளை மலர்கள் என்கிறோம் - மாணிக்கப்பரல்கள் என்கிறோம். அதன் கண்கள் நீலோற்பலம்! இதழ்கள் ரோஜா! சிரிப்பு பிறைநிலா! அசைவு தென்றல்! வடிவு தங்கப்பதுமை! இப்படியெல்லாம் கொஞ்சு தமிழில் குழந்தைகளை வர்ணிக்கும் கவிதை உள்ளங்கொண்டோரே, கொஞ்சம் என்னுடன் இந்தக் குடிசைப் பகுதிக்கு வாருங்கள். அதோ, கிழிந்த சாக்குப்படுதா தொங்குகிறதே அதுதான் அந்த மாளிகையின் மரக் கதவு! சேறும் சகதியும் வழிந்தோடு கிறதல்லவா வளைந்து வளைந்து, அதுதான் அந்த அரண்மனை யைச் சுற்றியுள்ள அகழி! அகழீமீது துள்ளிவிளையாடுகிறதே தொப்பை சுருங்கிய ஒரு குழந்தை, அதுதான் அந்த வீட்டு மகாராணியின் முதல் இளவரசன். அடுத்து ஒன்று சூம்பிய கால்கைகளுடன் தள்ளாடித் தள்ளாடி ராகம் பாடுகிறதே, அது இளவரசி. மகாராணியின் தோள்மீது ஒன்றும். மடிமீது ஒன்றும் எலும்புக் குச்சிகளாய்த் தேரைகள்போல் ஒட்டிக் கொண்டு, சிணுங்கி அழுவதற்கும் ஜீவனில்லாமல் கிடக்கின்ற னவே அவை தான் மலர்க் கொத்துக்கள் - மாணிக்கப்பரல்கள். இப்படியொரு உலகம், இந்தியா முழுமையும் அழகு முகத்தின் குறுமருக்கள் போல் பரவிக்கிடக்கிறது. வேதனை அதிகம்! திட்டங்களின் பயன்கள் அந்த 'நரகலோக வாசிகளைச் சென்று தொட வேண்டாமா? பறவைகளும், விலங்குகளும் வாழ்கின்றன. மனிதன் வாழ்க்கை நடத்துகிறான். இதைச் சொல்லச் சுவையாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் விலங்குகளைவிட மனித சமுதாயத்தின் பெரும் பிரிவு வேதனையை அதிகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.