106
புகழேந்தி நளன் கதை
“நீ ஒரு பணி செய்ய வேண்டும்” என்று கூப்பிட்டு அழைத்தாள்.
ஏதோ ஊர்ப் பயணம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.
“நீ அறிவாளி, உன்னால்தான் முடியும்” என்று கூறினாள்.
நம்பிக்கை ஊட்டும் சொல்லாக இருந்தது.
“இயன்றது செய்கிறேன்” என்றான்.
“என் மன்னவனைத் தேடிக் கண்டு இங்குக் கொண்டு வந்து சேர்க்க” என்றாள்.
“இது என்னால் இயல்வது அன்று; காவல் வீரர்கள் செய்யத்தக்க ஏவல் இது” என்று தெரிவித்தான்.
“உன்னைப் போல் அறிவுக் கூர்மை உடையவரால் தான் இது இயலும். புத்திசாலிகள்தான் இதைச் செய்ய முடியும்” என்று கூறினாள்.
“நீ நான்கு திசையும் செல்க. வழியில் எங்காவது நளன் அகப்படுவான். செய்தி கொண்டு வந்து தருக” என்றாள்.
“அவன் உருமாறி இருந்தால் என்ன செய்வது?” என்று கேட்டான்.
“கருமாரி அம்மனை வேண்டிக் கொள்; கருத்தில் இதை நிறுத்திக் கொள்” என்றாள்.
“காதலியைக் காரிருளில் தவிக்க விட்டுச் சென்றான் ஒரு காவலன்” என்று அவனிடம் பேச்சைத் தொடங்குக. “அதனைச் செவிமடுத்துக் கேட்டால் அதற்குத் தக்க விடை தர முற்பட்டால் அவனை விடாதே. தொடர்ந்து பேசு;