பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

புகழேந்தி நளன் கதை



வார்த்தை கொண்டு பார்த்தால் அவன் அவன்தான்; வடிவு கொண்டு பார்த்தால் அவன் அவன் அல்லன்” என்று கூறினான்.

அறிவு நிரம்பியவள்; சுயசிந்தனை மிக்கவள்; அவள் ஐம்புலனும் நல்லமைச்சு என்று பேசப்பட்டவள். அவன் கூறியது ஒரு விடுகதையாக இருந்தது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் அது என்ன என்று கேட்பதுபோல் இருந்தது. வார்த்தையில் நளன், வார்ப்பில் அவன் அல்லன் என்று கூறினான்.

அவள் வடிவைக் கொண்டு மயங்கவில்லை. அவன் உணர்வில் ஒன்றுபட்டவள்; உயிரோடு ஒன்றியவள். அதனால் அவன்தான் நளன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.

கள்வனைப் பிடிப்பது கடிய செயல் அன்று. அவனைக் கட்டி இழுத்துவரத் திட்டம் ஒன்று வகுத்தாள். ‘அதிரடி’ அறிவிப்பாக அது அமைந்தது. “தமயந்திக்கு மற்றும் ஒரு சுயம்வரம் என்று சற்றும் தயங்காது நீ சென்று உரை; அதைக் கேட்பான் அயோத்தி மன்னன்; உடனே அவன் என்னை வேட்க விரைந்து வருவான்".

“தேர் பூட்டத் தேர்ந்த ஆள் அவர்தான். அவர் தேரை ஒட்டிக் கொண்டு இந்த ஊர் வந்து சேர்வார். அதற்குப்பின் அவரை அறிய அறிவிக்க அவரை வெளிப்படுத்த எங்களால் முடியும். நீ சென்று வருக; அயோத்தி மன்னனிடம் சுயம்வரம் என்று விளம்பரம் செய். அதுபோதும். இது ராஜதந்திரம். அவனை அழைத்து வர யான் மேற்கொண்ட மந்திரம்” என்றாள்.

அந்தணனுக்கு மறுபயணம் வாய்த்தது.

“அந்தச் சுயம்வரம் நாளையே நடைபெறும் என்றும் கூறுக; நாள் குறித்தாகிவிட்டது என்று அறிவிக்க; ஒரே நாள்