132
புகழேந்தி நளன் கதை
கதை பாரதம் தந்தது; அதனைப் பாவில் வடித்துத் தந்தவர் புகழேந்தி. அவர் கவிதைச் சிறப்புகள் நம் நெஞ்சை அள்ளுவனவாக உள்ளன. அவர் கவிதைகளை மூன்று தலைப்பில் காணலாம். (1) அணிநலன் (2) சொல்லாட்சிகள் (3) செய்திகள். மூன்றும் அவர் கவிதை நலனுக்கு அடிப்படை என்று கூறலாம்.
உவமையணிகள் அவற்றில் அவரது கவித்துவம் தனித்தன்மையோடு விளங்குகின்றது.
நிடத நாடு திருமகளின் கண்கள் என்று கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது. வயல்களில் கயல்கள் புரள்கின்றன; கருங்குவளை முகை நெகிழ்கின்றது; தாமரையின் தளை அவிழ்கின்றது என்று கூறுகின்றார். கண்களின் பிறழ்ச்சியைக் கயல்களிலும், நிறத்தைக் கருங்குவளையிலும், அழ கினைத் தாமரையிலும் காட்டுகின்றார். இதனால் இவை பூமடந்தையின் கண்கள்போல் உள்ளன என்று கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது.
நாட்டு வருணனையில் மூன்று செய்திகளைக் கூறி அதனால் அது திருமகளின் கண்கள் போல் உள்ளது என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. பூ மடந்தை என்பது திருமகள் என்று கொள்வது தக்கது ஆகும். நிடத நாடு இக்காரணத்தால் திருமகளின் கண்போல் உள்ளது என்று நூலினைத் தொடங்குவது காவியத்துக்கு அழகு செய்கிறது.
காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு