பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

137



9. சொல்திறன்

அன்னம் நளனைப் பற்றித் தமயந்திக்கு அறிமுகம் செய்கிறது. அதில் அதன் சொல் திறம் வெளிப்படுகிறது. அவள் மனங்கொள்ளத் தக்க வகையில் எப்படிக் கூற வேண்டுமோ அப்படிக் கூறுவது சொல் திறனைக் காட்டுகிறது.

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு

“அவன் மனம் செம்மையது; இரக்க உணர்வினன்; செங்கோன்மைச் சிறப்பு உடையவன். மகளிர் மயங்கும் அழகன்; நளன் என்பது அவன் பெயர். அவனுக்கு இரு நிலத்தும் நிகர் யாருமே கூற முடியாது” என்று கூறுகிறது. சொல்திறன் எப்படி அமையவேண்டும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக உள்ளது.

10. சொல்லாட்சிச் சிறப்பு

அன்னத்தின் வருகையை நளன் ஆவலாக எதிர் பார்க்கிறான். நெடுவானில் மேகம் பின்னுக்கு ஒட அன்னம் வருகிறது. என்கிறார். அதனை நளன் கண்டான் என்கிறார். அவன் ஆர்வத்தைச் சொல்லடுக்கில் வைத்துக் கூறுவதும் உருவகச் சொற்களில் கூறுவதும் அழகு தருகின்றன. அழியாத சொல் வழக்குகளாகவும் இவற்றுள் ஒன்று இடம் பெற்றுவிட்டது.

‘வழிமேல் விழிவைத்து’ என்ற சொல்லாட்சி புகழேந்தியார் படைத்தது; ‘வழிமேல் விழியை வைத்து’ என்பது உருவகத் தொடர். இலக்கியத்தில் இது அழியாத