பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

புகழேந்தி நளன் கதை


பாயிரம்
இறை வணக்கம்
விநாயகர்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரி தங்கூற வருந்துணையாம் - ஈசன்
கரியா னனத்தான் கருது புகழ்பூண்ட
கரியா னனத்தான் கழல் 1

நம்மாழ்வார்

வளன்கூர் வயல்குழு மாநிடத மன்னன்
நளன்சீர் நவிலுநல நல்கும் - உளஞ்சேர்
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர் 2

திருமால்

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலேஎன அழைப்ப
என்னென்றான் எங்கட் கிறை 3

சிவபெருமான்

கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடைமேல் உறையும் - நிலாவை
வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்
கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. 4

திருமுருகன்

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை
மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல் சூர்வென்றோன்
அணிச்சே வடியென் அரண் 5