பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

197


சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின் வில்வேடன் கண்டு 306

ஆருயிறும் நானும் அழியாமல் ஐயாவிப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்
இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி
விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு 307

வேடன் காத்தல் இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்
சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து 308

வேடன் அழைப்ப விழிபதைத்து வெய்துயிரா
ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்
தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினி
ஆறெலாமாக வழுது 309

தீக்கட் புலிதொடரச் செல்லும் சிறுமான்போல்
ஆக்கை தளர வலம்ந்து - போக்கற்றுச்
சீறா விழித்தாள் சிலைவேடன் அவ்வளவில்
நீறாய் விழுந்தாள் நிலத்து 310

வண்டமிழ்வாணர்ப்பிழை வன்குடிபோல் தீத்தழன்மீ
மண்டு கொடுஞ்சுரத்தோர் மாடிருந்து - பண்டையுள
வாழ்வெல்லாம் தானினைந்து மற்றழுதாள் மன்னிழைத்த
தாழ்வெலாம் தன்தலைமேற் றந்து 311

வழிப் போக்கன் துணையாதல்


அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்
இவ்வளவு தீவினையேன் என்பாள்தன் - மெய்வடிவைக்