பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

புகழேந்தி நளன் கதை



அவர்கள் இன்னது கேட்கப் போகிறார்கள் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அதனால் இந்தத் தவறு செய்ய நேர்ந்தது.

“பணி இட்டால் செய்வேன்” என்றான்.

“சிறிதுதான்; செய்தி சொல்ல வேண்டும். நீ சொன்னால் அவள் கேட்பாள். எங்கள் நால்வருள் ஒருவர்க்கு அவள் ஏந்தி வரும் மாலையைச் சூட்டச் சொல்லுக; இதுபோதும்” என்று கூறினான்.

இடி விழுந்தது போல் இருந்தது. கட்டிய கனவுகள் சிதைந்தன. அவன் எழுப்பிய மனக் கோயில் அதில் வைத்திருந்த தெய்வத்தை அகற்றச் சொல்லினர். என் செய்வது?

வார்த்தை தந்து ஆகிவிட்டது. அதைக் காப்பது தன் கடமை என்று முடிவு செய்தான். காதலை அவன் உள்ளத்தில் இருந்து கிள்ளி எறிந்தான்; கடமை அதனை ஏற்றுக் கொண்டான்.

அவன் நெஞ்சு படாத பாடுபட்டது; தேவர்கள் இட்ட பணி ஒருபுறம்; கன்னி அவள்பால் கொண்ட காதல் மற்றொரு புறம். இரண்டு பக்கமும் அவன் நெஞ்சு தடுமாறியது. முன்னுக்குப் பின் சென்றது. பஞ்சுபடாதபாடு அவன் நெஞ்சு பட்டது. மாறி மாறிச் சென்றது. ‘பாவு’ நெய்பவர் அவர்கள் கைத்தறி அதில் உழலும் குழல் அதனைப் போல் நெஞ்சு மாறி மாறிச் சென்றது. வேதனை மிக்கவன் ஆயினான்.

கடமையை ஏற்றுக் கொண்டான்; இனி மடமையாக நடந்து கொள்ளக் கூடாது. அவளிடம் செல்வது என்று முடிவு செய்து கொண்டான்.

அவளை எப்படிக் காண்பது; அரசு அரண்மனை: கன்னிகள் உறையும் தனி மாடம் அது; அங்கே எப்படி