பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

வாசகர் அறிந்து மகிழ மூல நூல் செய்யுட்கள் அனைத்தும் பிண்ணிணைப்பில் தரப்பட்டுள்ளன.

இது உரை நூல் அன்று; சுவை நூல்; கவிதைத் திறனாய்வு நூல்.

இந்நூல் கவிதைகள் சுவை உடையன; கதை உள்ளத்தைத் தொடுவது; பழைய கதை நாட்டுக் கதை: கருத்துமிக்கது; சிறந்த நீதியை வற்புறுத்துவது.

இதனை எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி காண முடிந்தது; அதனைப் பகிர்ந்து கொள்வதே இந்நூல் வெளியீடு.

கம்பராமாயணம், மாபாரதம், சீவக சிந்தாமணி, திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றின் உரைநடை நூல்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். திருக்குறள் செய்திகள் என்ற நூலும் மூலநூலை அழகிய உரைநடையில் தந்துள்ளது.

இந்நூல் சுவைக்கத் தக்கது; கவிதை நயம் அறிய உதவுவது; வெளியிடுகிறோம்.

ரா. சீனிவாசன்