பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

87



கண்டால் அதைக் கண்டதுண்டமாக வெட்டிப் பிளந்து இருப்பான்.

நளன் வந்தபாடு இல்லை; பயணத்துக்காக வந்து வழி அனுப்பக் கூடாதா என்று ஏங்கினாள். வெளியில் கைநீட்டி வண்டிபோகும் வரை ‘டாட்டா’ சொல்ல அவள் முயற்சித்தாள். அவனுக்கு எப்படித் தெரியும் இப்படி அவள் ஒரு பாம்பின் வாயினுள் அகப்படுவாள் என்று.

தான் அவனைக் காணவில்லை. மக்களை நினைத்துக் கொண்டாள்; “நீங்களாவது அவரைக் காண்பீரோ!” என்று இறுதிச் சொற்கள் பேசினாள். பிள்ளைகளாவது தந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பது அவள் இறுதி விருப்பாக இருந்தது.

கை கூப்பி அவள் உள் செல்லப் புறப்பட்டாள். வண்டி நகரப் போகிறது; கதவுகளைத் தாளிடப் போகிறாள். யானை இருந்து தடுத்தது. அவள் சாகவில்லை; உயிருக்கு ஊறு நிகழவில்லை. “நாயகனே! வந்து என்னைக் காப்பாற்று” என்று உரக்கக் கூவினாள்.

பெண்ணின் குரல் அதற்கு ஒரு தனித் தன்மை இருந்தது. அழுகுரல் அது என்பதை வேடுவன் ஒருவன் அங்கு வந்தவன் அறிந்தான். காட்டில் ஒரு குழலோசையாக அது அவன் செவிமாட்டில் விழுந்தது.

குரல் வந்த திக்கு நோக்கி அவ்வேடுவன் விரைந்தான். கூப்பிய கரங்களோடு மங்கை ஒருத்தி அங்கை எடுத்து அழைப்பதைக் கண்டான்.

இதுவரை எந்த அழகியும் அவனைக் கரங்குவித்து அழைத்தது இல்லை.

பாம்பு அவளை விழுங்குவதை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கையில் வைத்திருந்த வில்