புலவர் என்.வி. கலைமணி 15
தடுக்காதீர்கள்' என்று டில்லி நாடாளுமன்றமே குரல் கொடுத்துக் கேட்டதே, அதுதான்் பெரிய பேச்சு என்பதை நிரூபித்த - நாவுக்கரசர் அண்ணா!
அண்ணா அவர்கள், நாடாளுமன்றத்தில் மூன்று முறை ஆற்றிய சொல்லேருழவம், சொல்லாடல் என்ற ஒன்று
இருப்போருக்கு இலக்கணங்கள்! - 'நா’ அதிகாரங்கள்!
மூளை என்ற ஒன்றுள்ளோருக்கு - அவை முத்தமிழ் இலக்கியங்கள்!
ஐக்கிய நாடுகள் அவை பற்றி, அண்மையில் அண்ணா ஆற்றிய உரையை, நீ கேட்டிருக்க மாட்டாய் என்று கருதுகிறேன்!
காரணம், உனக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லை! அதுபோன்ற ஒரு பேச்சைப் பேசக் கூடியவன், தற்காலக் கருவிலே இல்லை என்று பாராட்டி - அறிஞர்கள் ஒப்புக் கொண்டார்கள்!
அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக, அந்த அறிஞர் எழுதிய உரை, அறிவாளர் அணிகட்கு வேதம்:
'இவர் என்ன ஜீவானந்தத்தைப் போல, அடி வயிற்றிலே இருந்து பேசுபவரா? - மூக்கால் பேசுபவர்' என்று எழுதும் முகாரியே!
தோழர் ஜீவா அன்று பேசியதை, இன்று சாட்சியமாகக் கூறும் அரசியல் பாவங்களே!
அந்த நாட்களில் - காங்கிரஸ் ஆட்சியில், ஜீவாவின் அடி வயிற்றிலே இருந்து வெளிவந்த கனல் பழுத்த வார்த்தைகளால், சேலம் சிறையிலே நீங்கள் சுட்டுத் தள்ளிய இருபத்தொரு கம்யூனிஸ்டுப் பிணங்களைப் பற்றி எரிமலையென ஜீவா முழக்கமிட்டார் அல்லவா?
அப்போது எந்த மனித நேயங்கள் அவருடைய அரசியல் பேச்சை ரசித்துப் பாராட்டின! பஹல்த் அச்சா ஹை! போட்டன?