இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
9
பாஸ்கர சேதுபதி
(19 ஆம் நூற்றாண்டு)
(ஒயிற்கும்மி)
ஆற்றல் மிக்கவர் ஆட்சி புரிந்தவர்
ஆஸ்திக நீதிபதி - அவரே
பாஸ்கர சேதுபதி - புலவர்
போற்றுந்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர்
போனபின் ஏதுகதி ?
நற்றமிழ் கற்றவர் நன்மை புரிந்தவர்
நாதச் சுவையரசர் - இராம
நாத புரத்தரசர் - கவிதைப்
பற்றினைப் பற்றாகப் பற்றியொப் பற்ற நூல்
பாடிய பாட்டரசர்!
கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தவர்
கேள்வி நக்கீரரவர் - சிறந்த
வாள்வினை வீரரவர் - இளையான்
பிள்ளை எனுங்கவி ராயரைப் போன்றவர்
பேருப காரியவர் !