இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9 8
புகழ் மாலை
பந்த பாசச் சூழலிலே
பாரிற் பிறந்தோம் எனவெண்ணி நைந்து சாம்பி அழல் வேண்டா;
நல்லோர் பாலே அணுகியவர் சிந்தை ஒன்ற வகைசொல்லும் சீர்த்தி யறிந்து சாதனையை முந்திச் செய்வீர் என்கின்ருன்
முனிவன் ராம சுரத்குமார். 33 3
நாளைச் செய்வோம் என்று நீர்
நாளைப் போக்கல் நலமன்ரும்: வேளை எதுவும் நல்வேளை
விமலன் றன்னை நினைப்பதற்கே: நீளும் பாசம் கொண்டுவரும் நீசக் காலன் வருகின்ற வேளை யாவர் அறிவார்கள்?
விரைகென் பான்ராம் சுரத்குமார். - 334
கல்லே யெனினும் எறும்பூரத்
தேயும் காண்மின்; அதுபோல
அல்லே பெரிதும் உறுகின்ற
அவல மனத்தில் மெல்லமெல்ல
வல்லான் இறைவன் திருப்பதத்தை
வைத்தே தியானிக் கும்வழியில்
செல்வீர்; ஒருநாள் நலம்வருமால்:
தேர்கென் பான்ராம் சுரத்குமார். 335
ஆசை வைத்த பொருள்நிரம்பின்
அதளுே டாசை போவதிலை; பாசம் இறுகி நமையடர்த்துப்
பலவாம் பிறப்பில் உழலவைக்கும்;