இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வல்லிக்கண்ணன் 03
கடியும் குப்பையுமாய் ஆகி விட்டது. அப்புறம் எந்தப் பாதை வழியாகப் போனால் தான் என்ன?” -
நரகத்தை சொர்க்கமாகக் காட்டுவதும், சொர்க்கத்தை நரகமாக மாற்றுவதும் மனம் தான் என்கிற உண்மையை ராமமூர்த்தி மூலம் உணர்த்திய பிரமாணம் ஆகிவிட்ட அந்தத் தெரு வழக்கம் போல் கிடந்தது. நாகரிக நகரின் பெரும்பாலான தெருக்களைப் போன்ற சாதாரணத் தெரு தான் அதுவும்.