பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் {33

புரியாத குழப்பத்தில் எழுந்து, தெளிவு பெறுவதற்காக ஒ லிக்கும் பற்பல கேள்விகள்.

கெட்ட சொப்பனம் என்றேன்.

என்றாலும், என்னுள், என் குழப்பம் அதிகரிக்கிறது. எனக்குப் பைத்தியம் பிடித்துக் கொண்டிருக்கிறதா? இல்லை, என்றேனும் ஒரு நாள் அது பிடித்துவிடுமா?

அறிவுத் தெளிவுக்கும் பைத்திய நிலைக்கும் இடையே யுள்ள எல்லை மிகவும் நுண்மையானது. அது எப்போது, எப்படி, ஏன் பிறழும் என்று சொல்ல முடியாது என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். நான் அந்த எல்லைவெளியில் அந்தப் பக்கம் ஒரு காலும் இந்தப் பக்கம் ஒரு காலும் வைத்தபடி நிற்கிறேனா? - -

எனக்குப் புரியவில்லை.

எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது எனக்கு!