பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதேனும் நற்பயன் தந்துள்ளனவோ, அல்லது நல்லபல அணியாவது தரவல்லனவோ என்ருல், அதுவும் இல்லை. மனைவிவருந்த வந்து நீ புரிந்த போர்களால், வளம்மிக்க நாடுகள் பல பாழற்றுப்போனதே கண்டபலன். ஆகவே போதும் உன் பாசறை வாழ்க்கை. புறப்படு உன் மனை நோக்கி’ என்று கூருமல் கூறித், தம் கடன் ஆற்றிக் களித்தார்.

இமயவரம்பன், வாழத்தக்க வாய்ப்பினே அளிக்க மறுப்பதால், வளம் அற்றுப்போகும் நாடு, தான் வளம் அற்றுப்போவதோடு தன் அழிவினலேயே அவன் மனைமாட்சி, யின் வளத்தையும் கெடுத்து, அவன் வாழ்வதற்காம் வாய்ப்பினையும், அ ழி ந் து வி டு ம் இயல்பினை எண்ணிஅப்பொருள் உணர்த்தும் வளன் அறு பைதிரம் என்ற தொடரையே பாட்டின் பெயராக்கியுள்ளார்கள். 19. கொள்ளை வல்சிக் கவர்காளல் கூளியர்

கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரன் அறுப்ப, ஒண்பொறிக் கழற்கால் மாரு வயவர் திண்பிணி எஃகம் புலி உறை கழிப்ப, 5 செங்கள விருப்பொடு கூலம் முற்றிய

உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஒச்ச அம்புகளைவு அறியாச் சுற்றமொடு அம்புதெரிந்து 10 அவ்வினை மேவலை யாகலின்,

எல்லும் நனிஇருந்து எல்லிப் பெற்ற அரிதுபெறு பாயல் சிறுமகிழானும் கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய நானுமலி யாக்கை, வாள்துதல் அரிவைக்கு 15 யார்கொல்? அளியை,

95