பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்த வலியான அடித்துத்துரத்த அவ் இடவலி துணைபுரிய வல்லதாம். ஆனல் இமயவரம்பன் பால் அதுவும் செல்லாது. தான் சென்று முற்றியிருக்கும் பகை நாட்டரசர், தனக்கு ஒரு சிறு இடையூறு விளைக்கவும் இடம் தரமாட்டான். தனக்கு எதிராக அவர்கள் என்னென்ன சூழ்ச்சிகள் செய்ய இயலுமோ அவை அனைத்தையும், முன்கூட்டியே அறிந்து கெடுக்க வல்லவன், அவன் போர் முறை அத்துனே ஆழம் உடைத்து, ஆனல் வெற்றி கொள்ளவேண்டும் என்ற வேட்கையால், அறமல்லா வழிகளை மேற்கொண்டு விடுவனோ என்ருல், அதுவும் இல்லை. நேரே காணும்போது கலந்து உறவாடுவார் போல் காட்சி நல்கிக், காணாவிடத்துக் கேடேநினையும் கெடு நெஞ்சுடைமையால் பகைவராகி விட்டவர் நாட்டிலும் அவர்களை வெற்றிகொள்ள பொய் கூறல் முதலாம் பிழை நெற்களை மேற்கொள்ளான். அறத்தொடு பொருந்தா மறவாழ்க்கையை, அவன் மனம் கனவிலும் கருதா. து

அம்மட்டோ பகைவர் தம் நடையின் பெருமிதம் கண்டே ஒடுங்கி நிலைகுலைந்து போகுமாறு நடந்து செல்ல வல்லனவும், பணியாது எதிர்த்தாரைக் காலின்கீழ் இட்டு அழிக்கவல்லனவும் ஒலிக்கும் மணியுடையவும், ஒழுகும் மதநீர் உடையவும் ஆகிய யானைப்படைகள் எல்லாம் அலறிப்புடைத்து ஒடுமாறு, அப் பகைவர் தம் பரந்து அகன்ற பெரிய நாட்டைவென்று கைப்பற்றவல்ல வீறுடையான். அவவெற்றி கண்டு புலவர்கள் களம்பாடிச் சூட்டிய புகழ்மாலையுடையான். வென்ற அக்களங் களில் பகைவர் விட்டோடிய கணக்கற்ற குதிரைகளையும் களிறு களையும் தேர்களையும் தனக்கென ஆக்கிக் கொள்ளாது அவ்வளவையும் தன்னைப் பாடிவரும் வயிரியர் கூத்தர்போலும் இரவலர்க்கே கொடுத்துவிடும் குன்றாக் கொடைக்குணம். கொண்டவன்.

101